திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் விவசாய சங்கங்கள், தொழிலாளர்கள் சங்கங்கள் இணைந்து, மத்திய அரசின் தொழிலாளர் - விவசாயிகள் விரோத போக்கினை கண்டித்து, சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மன்னார்குடி மேல ராஜவீதி தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு , சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வை.செல்வராஜ் . தொமுச மாவட்டச் செயலர் கே.எஸ். மகாதேவன், சிஐடியு மாவட்ட நிர்வாகி ஜி.ரகுபதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
கோரிக்கைகள்: பெட்ரோல் , மத்திய அரசு டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். 3 வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இலவச மின்சாரத்தை பறிக்கும் மின் மசோதாவை கைவிட வேண்டும் . கருத்துரிமை - ஜனநாயக உரிமைகளை பறிக்கக் கூடாது.
இதில், தொமுச போக்குவரத்து தொழிலாலர்கள் சங்க கிளைத் தலைவர் எஸ்.சதீஸ்குமார் , ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நகரச் செயலர் எஸ்.எஸ். சரவணன், சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலர் கோவிந்தராஜ் , விவசாய சங்க நிர்வாகிகள் வி.எம். கலியபெருமாள் , ஜி.மாரிமுத்து, இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் துரை. அருள்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.