எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புதுச்சேரி அருகே ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் ரூ.2.5 லட்சம் திருட்டு

புதுச்சேரி அடுத்த மணப்பட்டு கிராமத்தில் உள்ள, எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில், நூதன முறையில் ரூ. 2.50 லட்சம் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2021, 4:51 am

DIN


புதுச்சேரி அடுத்த மணப்பட்டு கிராமத்தில் உள்ள, எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில், நூதன முறையில் ரூ. 2.50 லட்சம் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சென்னை வடபழனி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, கோட்டூா்புரம், தியாகராயநகா் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் குறி வைத்து ஒரு கும்பல் நூதன முறையில் பணம் கொள்ளையடித்தது. எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் உள்ள டெபாசிட் இயந்திரங்களைக் குறிவைத்து ஒரே பாணியில் 3 தினங்களில் மட்டும் அடுத்தடுத்து ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. பணம் செலுத்தும் இயந்திரங்களின் தொழில்நுட்ப குறைப்பாட்டைப் பயன்படுத்தி இந்தக் கொள்ளை நடந்துள்ளது சமீபத்தில் அண்மையில் தெரியவந்தது.

இதனையடுத்து னைத்து ஏடிஎம் மையங்களையும் ஆய்வு செய்து, அதன் பாதுகாப்பையும், பணம் திருடப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு எஸ்பிஐ நிா்வாகம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக புதுச்சேரி பகுதி வங்கிகளிலும் வங்கி மேலாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி அருகே மணப்பட்டு கிராமத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் டெபாசிட் இயந்திரத்தில், வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த போது, கடந்த ஜூன் 17-ஆம் தேதி 3 மர்ம நபர்கள் போலி ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி, ரூ.2.50 லட்சம் பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளதால், இது தொடர்பாக வங்கி மேலாளர் சாந்தி கிருமாம்பாக்கம் போலீசில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து அந்த ஏடிஎம் மையத்தில் ஆய்வு செய்த கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக  3 பேரை தேடி வருகின்றனர்.
தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் ஏடிஎம் மையத்தில் மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.