டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நவ.29ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி நவம்பர் 29ஆம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் என வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 5:30 am

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி நவம்பர் 29ஆம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் என வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராடி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறுவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடவும் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்தனர். இருப்பினும் இதுகுறித்து பேசிய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்றத்தில் புதிய  வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் நவம்பர் 29ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அந்த தினம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்யவும், மின்சார சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறவும் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்க இடம் ஒதுக்கக் கோரியும் இந்த டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.