அவசர கால பயன்பாட்டுக்கு கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
கோவேக்ஸின் தரமானதா, பாதுகாப்பானதா, பயனுள்ளதா என்பதை நிபுணர் குழு ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கும் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.
அவசரகால பயன்பாட்டுக்கு கோவேக்ஸினை பயன்படுத்த அனுமதி கோரி பாரத் பயோடெக் உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.