இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.76.80 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் சட்டவிரோதமான வகையில் கடத்தி வரப்பட்ட ரூ.76.80 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image
திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.76.80 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
Updated On :28 அக்டோபர் 2021, 4:29 pm

DIN

திருச்சி விமான நிலையத்தில் சட்டவிரோதமான வகையில் கடத்தி வரப்பட்ட ரூ.76.80 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமானநிலையத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து  பயணிகளையும் பயணிகளின் உடமைகளையும் சுங்கத்துறை,வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

இதில், சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த இருவரிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் இருவரும்,  தங்கத்தை உடலுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனையடுத்து  இருவரையும் கைது செய்து, தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

கடத்தி வரப்பட்ட தங்கம், 1.57 கிலோ கிராம் எடையில் இருந்தது. அதன் மதிப்பு ரூ.76.80 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.