கே.பி. பார்க் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் கட்டடங்கள் தரம் மோசமாக இருப்பது தொடர்பான கடந்த வார நிகழ்வுகள் சமூக ஊடகங்களிலும், செய்தி ஊடகங்களிலும் பெரிதளவில் கவனத்தை ஈர்த்தன.
இதுதவிர குடியமர்த்தப்பட்ட 864 குடும்பங்கள் தலா ரூ. 1.5 லட்சம் பயனீட்டாளர் தொகை கட்ட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததாக புதிய சிக்கலும் கவனம் பெற்றது.
எனவே, கே.பி. பார்க் மற்றும் அதைச் சுற்றி நிகழும் அனைத்து விஷயங்கள் குறித்தும் முழுமையாக பேச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வாவைத் தொடர்புகொண்டோம்.
கே.பி. பார்க் குடியிருப்பு பற்றிய முக்கியப் பிரச்னைகளை அவர் தினமணியிடம் பகிர்ந்துகொண்டார்.
அவருடன் நிகழ்த்திய உரையாடலைக் காண: