மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

சென்னையில் வாக்குப்பதிவின் போது ஒருவரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

News image

ஜெயக்குமார் (கோப்புப்படம்)

Updated On :21 பிப்ரவரி 2022, 4:15 pm

சென்னை: சென்னையில் வாக்குப்பதிவின் போது ஒருவரைத் தாக்கிய விவகாரத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக தொண்டரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் தாக்கிய விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் வாக்குப்பதிவின் போது அதிமுகவினரால் தாக்கப்பட்டவர் திமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை தண்டையார் பேட்டை காவல்   நிலையத்தில்  ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தண்டையார்ப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.