சென்னை: சென்னையில் வாக்குப்பதிவின் போது ஒருவரைத் தாக்கிய விவகாரத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக தொண்டரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் தாக்கிய விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் வாக்குப்பதிவின் போது அதிமுகவினரால் தாக்கப்பட்டவர் திமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
படிக்க | வைகோவிடம் நலம் விசாரித்தார் முதல்வர்
இது தொடர்பாக சென்னை தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தண்டையார்ப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.