ரூ.55,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!

சென்னையில் வெள்ளிக்கிழமை மீண்டும் புதிய உச்சமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு 
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு 

சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை மீண்டும் புதிய உச்சமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.54,440 ஆக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக மாா்ச் 28-ஆம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 50,000-ஆக உயர்ந்த நிலையில், ஏப்ரல் மாதம் தொடக்கம் முதல் தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

ஏப்ரல் 3 ஆம் தேதி தங்கத்தின் வரலாறு காணாத அளவில் உயர்ந்து ரூ.52,000 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு 
குணச்சித்திர நடிகர் அருள்மணி மாரடைப்பால் காலமானார்

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.12) மீண்டும் புதிய உச்சமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.640 உயா்ந்தது.

கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,805-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440-க்கும் விற்பனையாகிறது.

அதேபோன்று வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.1.50 காசு உயர்ந்து ரூ.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,500 உயர்ந்து ரூ.90.000-க்கும் விற்பனையாகிறது.

பணவீக்கம், உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணிகளால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com