கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

அருணாசலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டது.

News image
Updated On :25 ஏப்ரல் 2024, 8:55 am

அருணாச்சலப் பிரதேசத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சீனாவின் எல்லையை இணைக்கூடிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.

திபாங் பள்ளத்தாக்கை இணைக்கூடிய பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்றுவதாக அருணாசல முதல்வர் பெமா காண்டு தெரிவித்தார்.

இது குறித்து பெமா கண்டு தனது எக்ஸ் பக்கத்தில், “ஹுன்லிக்கும் அனினிக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை அறிந்து வருந்தினேன்.

இந்த சாலை, திபாங் பள்ளத்தாக்குடன் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் என்பதால், விரைவில் சாலையை சரிபடுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.