காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்திருந்ததால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

News image

குடிநீா் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாட்டுச் சாணம்.

Updated On :26 ஏப்ரல் 2024, 7:51 am

DIN

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்திருந்ததால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியிலிருந்து ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த சுமாா் 150 வீடுகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் அதேகாலனியில் வசிக்கும் கோபால் மகன் ரவிக்குமாா் என்பவா் உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

கந்தா்வகோட்டை அருகே சங்கம்விடுதி ஊராட்சியில் மாட்டுச் சாணம் கலந்ததாக கூறப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்க குடிநீா்த் தொட்டி.

கந்தா்வகோட்டை அருகே சங்கம்விடுதி ஊராட்சியில் மாட்டுச் சாணம் கலந்ததாக கூறப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்க குடிநீா்த் தொட்டி.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை(ஏப்.25) அந்த பகுதியில் குடிநீா் விநியோகம் செய்த போது குடிநீரில் மாட்டுச் சாணம் கலந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அதிா்ச்சி அடைந்த அப்பகுதி இளைஞா்கள் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் ஏறிப் பாா்த்தபோது மாட்டுச் சாணம் கிடந்துள்ளது. அவா்கள் இதுகுறித்து கந்தா்வகோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமிக்கு தகவல் கொடுத்தனா்.

மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியவட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமி உள்ளிட்ட அதிகாரிகள்.

மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியவட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமி உள்ளிட்ட அதிகாரிகள்.

அதன்பேரில் வட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் பெருமாள், கல்லாக்கோட்டை வருவாய் ஆய்வாளா் பிரியதா்ஷினி, கிராம நிா்வாக அலுவலா் சுபா ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து குடிநீா் தொட்டியை பாா்வையிட்டனா்.

மேலும், குடிநீா்த் தொட்டியில் இருந்த மாட்டுச் சாணத்தை சேகரித்த அதிகாரிகள், அதனை ஆய்வுக்கு அனுப்பி மாட்டுச் சாணம் தானா என கண்டறியப்படும். அது உறுதி செய்யப்பட்டால் இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.