பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பெங்களூருவில் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் திராவிட்.
பெங்களூருவில் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் திராவிட்.

பெங்களூரு: கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் திராவிட் பெங்களூருவில் வாக்களித்தார்.

543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 28 இடங்களைக் கொண்ட கர்நாடகத்தில், உடுப்பி சிகாமகளூர், ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூரு, சாமராஜநகர், பெங்களூரு கிராமம், பெங்களூர் வடக்கு, பெங்களூர் சென்ட்ரல், பெங்களூரு தெற்கு, சிக்பல்லாபூர், கோலார். ஆகிய 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது.

பெங்களூருவில் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் திராவிட்.
அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

கர்நாடகத்தில் 2019 தேர்தலில் மொத்தமுள்ள 28 இடங்களில் 25 இடங்களை பாஜக கைப்பற்றியது. இந்த முறை பாஜக 25 இடங்களில் போட்டியிடுகிறது, மீதமுள்ள 3 இடங்களில் அதன் மாநில கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் போட்டியிடுகிறது. ஜேடிஎஸ் ஹாசன், மாண்டியா மற்றும் கோலார் ஆகிய மூன்று தொகுதிகள் போட்டியிடுகிறது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் திராவிட் பெங்களூருவில் தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திராவிட், " வாக்காளர்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வந்து வாக்களிக்க வேண்டும். இது ஜனநாயகத்தில் நமக்குக் கிடைத்த வாய்ப்பு" என்றார்.

இதேபோன்று திராவிட்டின் முன்னாள் சக வீரரும், பழம்பெரும் இந்திய சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே பெங்களூருவில் தனது வாக்கை பதிவு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com