அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அதிர்ச்சியூட்டும் தகவல்! இனி ஏலியன்களின் வருகை அதிகமாகும்!

சேலத்தில் ஏலியனுக்கு சிலை அமைத்து வழிபாடு நடத்தும் ஆலயம்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 9:34 am

DIN

இனி ஏலியன்களின் வருகை அதிகமாக இருக்கும் என்று அதிர்ச்சியூட்டும் தகவலைப் பகிர்ந்துள்ளார் பாக்யா சித்தர்.

சேலம் மல்லமுப்பம்பட்டி பகுதியில் சிவ கைலாய ஆலயத்தில் இரட்டை ஆருடை சிவலிங்கம் அமைந்துள்ளது. மேலும் சக்திதேவி, பார்வதிதேவி, சிவன் லிங்க ரூபத்தில் அமைந்துள்ளது. மேலும் பஞ்சமி வராகி அம்மன், நான்குமுக முருகன், ஐந்துமுக காளி மற்றும் காமதேனு உள்ளிட்ட கடவுள் சிலைகள் ஒவ்வொரு சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ராமர் போர் முடிந்து ஓய்வு பெற்ற இடம் என்பதால் ராமகவுண்டனூர் என்ற பெயர் பெற்றுள்ளதால் அம்பு எய்த கோலத்தில் இங்கு ராமர் சிலை அமைக்கப்பட உள்ளதாகவும் இந்தக் கோயிலை லோகநாதன் என்ற சித்தர் பாக்கியா என்பவர் நடத்தி வருகிறார்.

இதனிடையே, இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் ஏலியனை கடவுளாகப் பாவித்து அதன் சிலையைப் பாதாளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

பாக்யா சித்தர் கூறுகையில், ”பிரபஞ்சத்தில் சிவன் படைத்த முதல் பிரபஞ்ச தெய்வம் ஏலியன் தான். உலகிலேயே ஏலியனின் முதல் சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், இந்தக் கோயிலில் சிலையமைப்பதற்கு முன்பாக ஏலியனிடம் அனுமதி பெற்றுதான் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏலியன் சிலை அமைப்பதற்காக ஏலியன் தெய்வங்கள் அனுமதி கொடுத்ததால் சிலை அமைக்கப்பட்டுள்ளதால் ஏலியனை வணங்கி மகிழ்ச்சிடையுங்கள் என்றும் அதிர்ச்சித் தகவலை பாக்யா சித்தர் பகிர்ந்துள்ளார்.

பாக்யா சித்தர் மேலும் கூறுகையில், “குறிப்பாக இனிமேல் ஏலியனின் வருகை இனி அதிகமாகும்.

உலக நாடுகள் அனைத்தும் ஆராய்ந்து வருகின்றனர். உலக நாடுகள் வெளியே சொல்லாமல் மறைக்கிறார்கள். ஏலியன்கள் உலகிற்கு தீங்கு செய்யமாட்டார்கள். அவர்களிடம் அளவில்லாத சக்தியும் உள்ளது. மக்களுக்கு எந்தவித கெடுதலும் செய்யமாட்டார்கள்.

நன்மை செய்ய மட்டுமே நம்மைத் தேடி வருகிறார்கள். அதற்காகத்தான் இந்த ஆலயத்தை அமைத்துள்ளேன். ஏலியன் திரைப்படத்தில் வருவது போன்றெல்லாம் இருக்க மாட்டார்கள். மனிதர்களைப் போன்று அவர்களுக்கான ரூபத்தில் சாதாரணமாக இருக்கிறார்கள். ஆண், பெண் உள்ளிட்ட ரூபத்தில் இருப்பார்கள். மனிதர்களைப் போன்று தான் அவர்களும்” என்று அதிர்ச்சி ஏற்படுத்துகிறார் பாக்யா சித்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.