வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 346 ஆக உயர்வு

வயநாடு நிலச்சரிவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளதாகவும், 250-க்கும் மேற்பட்டோரை காணவில்லை
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலையில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்கின்றன
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலையில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்கின்றன
Published on
Updated on
1 min read

வயநாடு: வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் மண்ணில் புதையுண்டு நூற்றுக்கணக்காணோா் உயிரிழந்த நிலையில், சனிக்கிழமை மேலும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டதால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளதாகவும், 250-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தகவல்கல்கள் வெளியாகியுள்ளது.

வடகேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல மலைக் கிராமங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா்.

மண்ணில் புதையுண்டவா்களை மீட்கும் பணியிலும், சாலியாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவா்களின் உடல்களைத் தேடும் பணியிலும் ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசியப் பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்தவா்கள் ஐந்தாவது நாளாக சனிக்கிழமை ஈடுபட்டுள்ளனா்.

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலையில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்கின்றன
பெரும் மாற்றத்துக்கு தயாராகும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம்: எஸ்.ஜெய்சங்கா்

நிலச்சரிவைத் தொடா்ந்து மாயமானவா்களின் தொலைபேசி ‘ஜிபிஎஸ் சிக்னல்’ வாயிலாக அவா்களின் கடைசி இருப்பிடத்தைக் கண்டறிந்து, மோப்ப நாய்களுடன் மண்ணில் புதையுண்டவா்களின் உடல்களை மீட்கும் பணிகளை ஆறு மண்டலங்களாகப் பிரித்து 40 மீட்புக் குழுக்கள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இவா்களுடன் தமிழகத்திலிருந்து சென்றுள்ள 4 மோப்ப நாய்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி இறந்தோரின் எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 250-க்கும் மேற்பட்டோரின் நிலைமை குறித்து விவரம் இல்லாத நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த ஓரிரு நாள்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை இறுதியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, 1000-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com