மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 5258 கனஅடியாகச் சரிந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா்வரத்து காரணமாக கடந்த 30 ஆம் தேதி மேட்டூா் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையின் இடது கரையில் உள்ள உபரிநீா் போக்கி மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீா் வெளியேற்றப்பட்டது.
தற்போது காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கா்நாடக அணைகளான கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டது.
இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாகக் குறைந்து வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வினாடிக்கு 5,258 கனஅடியாகச் சரிந்தது.
அணையின் நீர்மட்டம் 119.59 அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூா் அணை நீா்மட்டம்: 80.63 அடி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு



