
கோவை: கோவை சா்வதேச விமான நிலையத்தில் ரூ.56 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும்,சென்னை, மும்பை,பெங்களூர், தில்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் விமானங்களில் தங்கக் கட்டிகள் உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிங்கப்பூரில் இருந்து கோவை சா்தேச விமான நிலையத்துக்கு வந்த சிங்கப்பூா் விமானப் பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, இரண்டு பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளாா். இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் ரகசிய அறைக்கு அழைத்துச் சென்று அவரது உடமைகளை பரிசோதனை செய்ததில், அதில் தலா 100 கிராம் எடை கொண்ட ஆறு தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.41 லட்சத்து 75 ஆயிரம் ஆகும்.
அதேபோன்று மற்றொரு பயணியின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் ஏராளமான வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை கொண்டு வர உரிய அனுமதி பெறவில்லை. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த பயணியிடம் இருந்த 90 ஆயிரம் சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 15 லட்சத்து 30 ஆயிரமாகும் என்றனா். அந்த இரண்டு பேரிடமும் சுங்கத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.