தங்கலான் படத்தின் இயக்குநர் பா. இரஞ்சித் மீது பூவிருந்தவல்லி நீதிமன்ற வழக்குரைஞர் பொற்கொடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நாயகனாக விக்ரம் நடித்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த இப்படம் ஆக. 15-ல் உலகளவில் வெளியானது.
கோலார் தங்கச் சுரங்கம், தங்கத்துக்கு யார் சொந்தக்காரர்கள் என்று பூர்வகுடிகளின் கதைகளப் பற்றி பேசியுள்ளது தங்கலான்.
இந்தப் படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி நடித்துள்ளார்கள். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், தங்கலான் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த காட்சிகள் தொடர்பாக பா. இரஞ்சித் மீது பெண் வழக்குரைஞர் பொற்கொடி புகார் அளித்துள்ளார்
அவர் அளித்த புகாரில், “புத்த மதத்தை உயர்த்துவதற்காக வைணவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில், தங்கலான் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் மற்றும் இரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வலிமை படத்தின் தோல்விக்குக் காரணம் இதுதான்... மனம் திறந்த இயக்குநர் எச். வினோத்!

மாணவர்கள் தாக்கப்படும் விடியோக்களை முதல்வர் பார்க்கவில்லையா? - பா. ரஞ்சித் கேள்வி!

5 ஆண்டுகளை நிறைவு செய்த சார்பட்டா பரம்பரை! பாகம் - 2 அப்டேட் எப்போது?
இயக்குநர் பாலா படங்களில் வன்முறைகளில் மறைந்த நகைச்சுவைகள்!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



