அடுத்த 3 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் புதன்கிழமை(ஆக.21) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை(ஆக.21) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வடதமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (ஆக.21) முதல் ஆக.26-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோப்புப்படம்
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பொதுத் துறை வங்கிகளில் 4455 புரபேஷனரி அலுவலர், மேலாளர் டிரெய்னி பணி!

புதன்கிழமை (ஆக.21) காலை 10 மணி வரை கோவை, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

முன்னதாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும்(ஆக.21, 22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com