மதுரை: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக மதுரை - செங்கோட்டை பயணிகள் விரைவு ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி, ஆக. 26, 27 மற்றும் செப். 8, 9 ஆகிய தேதிகளில் ராஜபாளையம்- சங்கரன்கோவில் இடையேயான ரயில் போக்குவரத்து காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.20 மணி வரை தடை செய்யப்படுகிறது.
இதனால், மேற்கண்ட 4 நாள்களிலும் செங்கோட்டை- மதுரை பயணிகள் விரைவு ரயில் (06664) செங்கோட்டையிலிருந்து பிற்பகல் 12.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடம் தாமதமாக 1 மணிக்குப் புறப்படும்.
ராஜபாளையத்தில் இருந்து பிற்பகல் 2.10 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு மதுரை சென்று சேரும்.
இதன்படி பயணிகள் தங்களது பயணத்திட்டத்தை அமைத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயில் வழித் தடத்தில் மாற்றம்

செங்கோட்டை - நெல்லை ரயில் மீது கல்வீச்சு: சிறுவன் காயம்

காரைக்காலில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆய்வு

டிக்கெட் முன்பதிவு! ரயில்வேயின் புதிய மாற்றம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை



