மதுரை - செங்கோட்டை ரயில் நேரம் 4 நாள்களுக்கு மாற்றம்!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக மதுரை - செங்கோட்டை பயணிகள் விரைவு ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மதுரை: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக மதுரை - செங்கோட்டை பயணிகள் விரைவு ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோப்புப்படம்
வங்கிப் பணியாளா் போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்க காலம் அவகாசம் நீட்டிப்பு!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி, ஆக. 26, 27 மற்றும் செப். 8, 9 ஆகிய தேதிகளில் ராஜபாளையம்- சங்கரன்கோவில் இடையேயான ரயில் போக்குவரத்து காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.20 மணி வரை தடை செய்யப்படுகிறது.

இதனால், மேற்கண்ட 4 நாள்களிலும் செங்கோட்டை- மதுரை பயணிகள் விரைவு ரயில் (06664) செங்கோட்டையிலிருந்து பிற்பகல் 12.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடம் தாமதமாக 1 மணிக்குப் புறப்படும்.

ராஜபாளையத்தில் இருந்து பிற்பகல் 2.10 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு மதுரை சென்று சேரும்.

இதன்படி பயணிகள் தங்களது பயணத்திட்டத்தை அமைத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com