சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

எச்சரிக்கை! ஒகேனக்கல், சிறுவாணி அணை செல்வோர் கவனத்துக்கு...

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஒகேனக்கல், சிறுவாணி பகுதிகளுக்குச் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.

News image
ஒகேனக்கல் அருவி
Updated On :2 டிசம்பர் 2024, 7:46 am

DIN

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஒகேனக்கல், சிறுவாணி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்குச் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடக்கத் தொடங்கியது.

இந்த புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை கனமழை பெய்த நிலையில் விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்தது.

தற்போது சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

இதையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று சமூக வலைதள பக்கத்தில்,

'மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள ஒகேனக்கல், சிறுவாணி அணை மற்றும் பிற அணைப் பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதனால் மேற்கு தொடர்ச்சி மலை உள்ள சுற்றுலா பகுதிகளுக்குச் செல்லும் மக்கள், சுற்றுலா பயணிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.