தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

வேலூர் அருகே லாரி மீது ஜீப் மோதி 3 பேர் பலி

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அதிவேகத்தில் வந்த ஜீப் நிலை தடுமாறி சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.

News image

வேலூர் அருகே லாரி மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய ஜீப்

Updated On :4 டிசம்பர் 2024, 9:59 am IST

வேலூர்: சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அதிவேகத்தில் வந்த ஜீப் நிலை தடுமாறி சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.

ஜீப் அப்பளம் போல் நொறுங்கியது. காயமடைந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த ஜீப் நிலை தடுமாறி வேலூர் அடுத்த கொணவட்டம் பகுதியில் சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்தில் ஜீப் முழுவதுமாக நொறுங்கிய நிலையில், ஜிப்பில் படுகாயங்களுடன் மீட்க பட்ட நான்கு பேரில் மூவர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், ஒருவர் வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒருவர் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இருவர் என மூன்று பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் விவரம் தெரியவில்லை. மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த இடத்தில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு விசாரணை மேற்கொண்டார். விபத்தில் சிக்கியவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விபத்துக்குள்ளான ஜீப்பை ரெக்கவரி வாகனம் மூலம் அப்புறப்படுத்தினர்.

வேலூரில் அதிகாலை நடந்த இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.