தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வேலூர் அருகே லாரி மீது ஜீப் மோதி 3 பேர் பலி

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அதிவேகத்தில் வந்த ஜீப் நிலை தடுமாறி சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.

News image

வேலூர் அருகே லாரி மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய ஜீப்

Updated On :4 டிசம்பர் 2024, 9:59 am IST

வேலூர்: சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அதிவேகத்தில் வந்த ஜீப் நிலை தடுமாறி சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.

ஜீப் அப்பளம் போல் நொறுங்கியது. காயமடைந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த ஜீப் நிலை தடுமாறி வேலூர் அடுத்த கொணவட்டம் பகுதியில் சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்தில் ஜீப் முழுவதுமாக நொறுங்கிய நிலையில், ஜிப்பில் படுகாயங்களுடன் மீட்க பட்ட நான்கு பேரில் மூவர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், ஒருவர் வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒருவர் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இருவர் என மூன்று பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் விவரம் தெரியவில்லை. மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த இடத்தில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு விசாரணை மேற்கொண்டார். விபத்தில் சிக்கியவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விபத்துக்குள்ளான ஜீப்பை ரெக்கவரி வாகனம் மூலம் அப்புறப்படுத்தினர்.

வேலூரில் அதிகாலை நடந்த இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.