8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன: முதல்வர் ஸ்டாலின்

காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர்.
mk stalin
முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஏற்கெனவே 8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் 2-வது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

அவர் பேசுகையில், "காலநிலை மாற்றம்தான் மனித சமுதாயம் எதிர்கொள்ளக்கூடிய மாபெரும் சவால். கால நிலை மாற்றத்துக்காக அமைக்கப்பட்ட இந்த குழுதான் இந்தியாவிலேயே அமைக்கப்பட்ட முதல் குழுவாகும்.

ஏற்கெனவே 8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நெய்தல் மீட்பு திட்டம் மூலம் 1,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு அலையாத்தி காடுகளை உருவாக்கி வருகிறோம். காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நம்மை தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com