வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

சிரியாவின் முன்னாள் அதிபர் கல்லறைக்கு தீவைப்பு!

சிரியாவின் முன்னாள் அதிபரின் கல்லறைக்கு கிளர்ச்சிப் படையினர் தீவைத்துள்ளதைப் பற்றி..

News image

கர்தஹாவில் முன்னாள் அதிபர் ஹஃபேஸ் அல்-அஸாத்தின் கல்லறை கிளர்ச்சிப் படையினரால் தீவைக்கப்பட்டப் பொழுது.

Updated On :12 டிசம்பர் 2024, 12:10 pm IST

சிரியாவில் முன்னாள் அதிபர் கல்லறைக்கு கிளர்ச்சிப்படையினர் தீவைப்பு!

கர்தஹா: சிரியா நாட்டின் முன்னாள் அதிபரும், தற்போது தப்பியோடிய அதிபர் பஷார் அல் - அஸாத்தின் தந்தையுமான ஹஃபேஸ் அல்-அஸாத்தின் கல்லறை, கிளர்ச்சிப் படையினரினால் தகர்க்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.

அல்-அஸாத்தின் குடும்பத்திற்கு எதிராக வெடித்த கிளர்ச்சியில் அதன் அதிபர் பஷார் அல்-அஸாத் தப்பியோடினார். இதன்மூலம், அவரது குடும்பத்தின் 54 ஆண்டுக்கால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த கிளர்ச்சிப் படையினர் சிரியாவை கைப்பற்றினார்கள்.

பின்னர், அந்நாடு முழுவதும் அல்-அஸாத் குடும்ப உறுப்பினர்களின் நினைவாக நிறுவப்பட்டிருந்த சிலைகளும் நினைவுச் சின்னங்களும் கிளர்ச்சியாளர்களாலும் பொதுமக்களாலும் தகர்க்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து தற்போது லத்தாகியா மாகாணத்திலுள்ள அவர்களது சொந்த ஊரான கர்தஹாவிலிருக்கும், அல்-அஸாத் குடும்ப ஆட்சியின் நிறுவனரும் சிரியாவின் முன்னாள் அதிபருமான ஹஃபேஸ் அல்-அஸாத்தின் கல்லறையை, ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் எனும் இஸ்லாமிய கிளர்ச்சிப் படையினர் தகர்த்து தீவைத்தனர்.

அழகிய கட்டடக்கலையில் கட்டப்பட்ட அவரது குடும்ப நினைவகம் தற்போது கிளர்ச்சிப்படையனரால் சேதாரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதே வளாகத்தில்தான் ஹஃபேஸின் மனைவி மற்றும் அவரது மூத்த மகனான பேஸல் அல்-அஸாத்தின் கல்லறையும் உள்ளது.

ஹஃபேஸுக்கு பின்னர் பேஸல்தான் அந்நாட்டு அதிபர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1994 ஆம் ஆண்டு அவர் கார் விபத்து ஒன்றில் பலியானார். அதன் பின்னரே அவரது தம்பியான தற்போது தப்பியோடிய பஷார் அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்டு அவர்களது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அதிபராக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.