திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சிரியாவின் முன்னாள் அதிபர் கல்லறைக்கு தீவைப்பு!

சிரியாவின் முன்னாள் அதிபரின் கல்லறைக்கு கிளர்ச்சிப் படையினர் தீவைத்துள்ளதைப் பற்றி..

News image

கர்தஹாவில் முன்னாள் அதிபர் ஹஃபேஸ் அல்-அஸாத்தின் கல்லறை கிளர்ச்சிப் படையினரால் தீவைக்கப்பட்டப் பொழுது.

Updated On :12 டிசம்பர் 2024, 12:10 pm IST

சிரியாவில் முன்னாள் அதிபர் கல்லறைக்கு கிளர்ச்சிப்படையினர் தீவைப்பு!

கர்தஹா: சிரியா நாட்டின் முன்னாள் அதிபரும், தற்போது தப்பியோடிய அதிபர் பஷார் அல் - அஸாத்தின் தந்தையுமான ஹஃபேஸ் அல்-அஸாத்தின் கல்லறை, கிளர்ச்சிப் படையினரினால் தகர்க்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.

அல்-அஸாத்தின் குடும்பத்திற்கு எதிராக வெடித்த கிளர்ச்சியில் அதன் அதிபர் பஷார் அல்-அஸாத் தப்பியோடினார். இதன்மூலம், அவரது குடும்பத்தின் 54 ஆண்டுக்கால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த கிளர்ச்சிப் படையினர் சிரியாவை கைப்பற்றினார்கள்.

பின்னர், அந்நாடு முழுவதும் அல்-அஸாத் குடும்ப உறுப்பினர்களின் நினைவாக நிறுவப்பட்டிருந்த சிலைகளும் நினைவுச் சின்னங்களும் கிளர்ச்சியாளர்களாலும் பொதுமக்களாலும் தகர்க்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து தற்போது லத்தாகியா மாகாணத்திலுள்ள அவர்களது சொந்த ஊரான கர்தஹாவிலிருக்கும், அல்-அஸாத் குடும்ப ஆட்சியின் நிறுவனரும் சிரியாவின் முன்னாள் அதிபருமான ஹஃபேஸ் அல்-அஸாத்தின் கல்லறையை, ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் எனும் இஸ்லாமிய கிளர்ச்சிப் படையினர் தகர்த்து தீவைத்தனர்.

அழகிய கட்டடக்கலையில் கட்டப்பட்ட அவரது குடும்ப நினைவகம் தற்போது கிளர்ச்சிப்படையனரால் சேதாரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதே வளாகத்தில்தான் ஹஃபேஸின் மனைவி மற்றும் அவரது மூத்த மகனான பேஸல் அல்-அஸாத்தின் கல்லறையும் உள்ளது.

ஹஃபேஸுக்கு பின்னர் பேஸல்தான் அந்நாட்டு அதிபர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1994 ஆம் ஆண்டு அவர் கார் விபத்து ஒன்றில் பலியானார். அதன் பின்னரே அவரது தம்பியான தற்போது தப்பியோடிய பஷார் அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்டு அவர்களது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அதிபராக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.