மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சிரியாவின் முன்னாள் அதிபர் கல்லறைக்கு தீவைப்பு!

சிரியாவின் முன்னாள் அதிபரின் கல்லறைக்கு கிளர்ச்சிப் படையினர் தீவைத்துள்ளதைப் பற்றி..

கர்தஹாவில் முன்னாள் அதிபர் ஹஃபேஸ் அல்-அஸாத்தின் கல்லறை கிளர்ச்சிப் படையினரால் தீவைக்கப்பட்டப் பொழுது.

Published On :

சிரியாவில் முன்னாள் அதிபர் கல்லறைக்கு கிளர்ச்சிப்படையினர் தீவைப்பு!

கர்தஹா: சிரியா நாட்டின் முன்னாள் அதிபரும், தற்போது தப்பியோடிய அதிபர் பஷார் அல் - அஸாத்தின் தந்தையுமான ஹஃபேஸ் அல்-அஸாத்தின் கல்லறை, கிளர்ச்சிப் படையினரினால் தகர்க்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.

அல்-அஸாத்தின் குடும்பத்திற்கு எதிராக வெடித்த கிளர்ச்சியில் அதன் அதிபர் பஷார் அல்-அஸாத் தப்பியோடினார். இதன்மூலம், அவரது குடும்பத்தின் 54 ஆண்டுக்கால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த கிளர்ச்சிப் படையினர் சிரியாவை கைப்பற்றினார்கள்.

பின்னர், அந்நாடு முழுவதும் அல்-அஸாத் குடும்ப உறுப்பினர்களின் நினைவாக நிறுவப்பட்டிருந்த சிலைகளும் நினைவுச் சின்னங்களும் கிளர்ச்சியாளர்களாலும் பொதுமக்களாலும் தகர்க்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து தற்போது லத்தாகியா மாகாணத்திலுள்ள அவர்களது சொந்த ஊரான கர்தஹாவிலிருக்கும், அல்-அஸாத் குடும்ப ஆட்சியின் நிறுவனரும் சிரியாவின் முன்னாள் அதிபருமான ஹஃபேஸ் அல்-அஸாத்தின் கல்லறையை, ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் எனும் இஸ்லாமிய கிளர்ச்சிப் படையினர் தகர்த்து தீவைத்தனர்.

அழகிய கட்டடக்கலையில் கட்டப்பட்ட அவரது குடும்ப நினைவகம் தற்போது கிளர்ச்சிப்படையனரால் சேதாரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதே வளாகத்தில்தான் ஹஃபேஸின் மனைவி மற்றும் அவரது மூத்த மகனான பேஸல் அல்-அஸாத்தின் கல்லறையும் உள்ளது.

ஹஃபேஸுக்கு பின்னர் பேஸல்தான் அந்நாட்டு அதிபர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1994 ஆம் ஆண்டு அவர் கார் விபத்து ஒன்றில் பலியானார். அதன் பின்னரே அவரது தம்பியான தற்போது தப்பியோடிய பஷார் அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்டு அவர்களது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அதிபராக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.