டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு சிறை!

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டதைப் பற்றி..

News image
(கோப்புப்படம்)
Updated On :21 டிசம்பர் 2024, 6:31 am

DIN

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும், தன் தந்தையைத் தாக்கியதற்காகவும் அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

அர்ஜுன் ரவி (வயது-25) கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று இரவு சிங்கப்பூரிலுள்ள லிட்டில் இந்தியா எனும் பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது செல்போனில், அர்ஜுன் தப்பிச் செல்வதற்குள் படம் பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரைக் கண்டுப்பிடித்த சிங்கப்பூர் காவல்துறையினர் கடந்த மே 10ஆம் தேதியன்று அவரைக் கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ஆனால், அர்ஜுன் கதவைத் திறக்காமல் வீட்டிற்குள் இருந்த அவரது 64 வயதுடைய தந்தையை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு மூக்கு உடைந்தும் பல இடங்களில் பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் கதவருகே காவல்துறையினர் காத்திருந்தபோது நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

பின்னர், அர்ஜுனைக் கைது செய்த போலீஸார் அவரது தந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று (டிச.20) பெண்னை பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் தந்தையைத் தாக்கியது என இருவழக்கிலும் அவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 1 ஆண்டு 5 மாதம் 6 வார காலத்திற்கு சிறை தண்டனை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.