பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து நடிகர் ரஞ்சித் வெளியேற்றப்பட்டார்.
இந்நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே நடிகர் சத்யா வெளியேற்றப்பட்டார். பின்னர் நடிகை தர்ஷிகா வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் இருந்த நிலையில், நடிகர் ரஞ்சித் வெளியேற்றப்பட்டதால், தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளனர்.
கடந்த வாரம் கற்களை கொண்டுகோட்டை கட்டும் போட்டி நடத்தப்பட்டது. மூன்று நாள் நடைபெற்ற இப்பொட்டி சண்டையும் சச்சரவுமாகவே நடைபெற்றது.
மஞ்சரியுடன் அணிசேர்ந்து விளையாடிய ராணவ்வுக்கு ஜெஃப்ரியுடன் ஏற்பட்ட மோதலில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதல், ராணவ் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டார். இதனால் போட்டியில் இருந்து அவர் விலக்கப்பட்டார்.
இந்த போட்டியில் ஜாக்குலின், ரயான் மற்றும் ரஞ்சித் இடம்பெற்ற அணி இறுதியில் வெற்றி பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அவர்களில் இருந்து ரயானை தேர்வு செய்து நாமினேசன் ஃப்ரீ பாஸை அந்த அணியினர் வழங்கினர்.
இந்த நிலையில், மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் ரஞ்சித் இந்நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டார்.
இறுதிப்போட்டிக்கு இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில், போட்டி கடுமையாக மாறும் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 03-05-2026

ஆண் குழந்தைக்கு தந்தையான பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி!

கிழக்குச் சீமையிலே பட பாணியில் புதிய தொடர்!

சின்ன திரையில் அறிமுகமாகும் பிக் பாஸ் ரியா!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


