மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தென் கொரியாவின் 3வது ராணுவ செயற்கைக்கோள் வெற்றி!

தென்கொரியாவின் 3வது ராணுவ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைப் பற்றி..

News image

கோப்புப்படம்

Updated On :22 டிசம்பர் 2024, 3:37 pm IST

தென் கொரியாவின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3வது ராணுவ உளவுச் செயற்கைக்கோள் நேற்று (டிச.21) அமெரிக்க விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள வாண்டென்பர்க் விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ராக்கெட்டின் மூலம் தென் கொரியாவின் 3 வது ராணுவச் செயற்கைக்கோள் தென்கொரிய நேரப்படி நேற்று இரவு 8:34 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

வட கொரியாவை கண்காணிக்க சிறியது முதல் பெரியது வரையிலான ஐந்து செயற்கைக்கோள்களை 2025 ஆம் ஆண்டின் முடிவிற்குள் விண்ணில் ஏவ தென்கொரியா திட்டமிட்டுள்ளது.

இதில் ஏற்கனவே இரண்டு செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், மூன்றாவது ராணுவச் செயற்கைக் கோள் சோதனை முயற்சியும் வெற்றியடைந்துள்ளது.

முன்னதாக, தென் கொரியா செயற்கைக்கோள் சார்ந்த உதவிகளுக்கு அமெரிக்காவை முழுவதுமாக சார்ந்து இருந்த நிலையில், தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோளை அமெரிக்காவின் உதவியோடு விண்ணில் செலுத்தி வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.