மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் சட்டவிரோதமாக குடியேறிய 1 பெண் உள்ளிட்ட 8 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர்.
அம்மாநில காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பின்வாடி நகரத்தின் கல்ஹர் மற்றும் கோங்கவும் எனும் இடங்களில் நேற்று (டிச.22) மற்றும் அதற்கு முந்தைய நாள் (டிச.21) ஆகிய இரு நாள்களும் போலீஸார் சோதனை நடத்தினார்கள்.
அப்போது, அங்கு எந்தவொரு அடையாள ஆவணங்களும் இல்லாமல் தங்கியிருந்த ஒரு பெண் உள்ளிட்ட 8 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறிய 8 வங்கதேசத்தினரும் தொழிலாளிகளாக வேலைச் செய்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் 22 முதல் 42 வயதிற்குள்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் மீது வெளிநாட்டு குடிமக்கள் சட்டம் மற்றும் இந்திய பாஸ்போர்ட் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அந்நாட்டினர் பலர் பிழைப்புத் தேடி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









