தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நேரு காரணம்னு சொல்லாதீங்க என மோடியை சாடிய மன்மோகன்!

பிரதமரின் பதவிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளதாக நான் உணர்கிறேன். தவறுகளை குறைத்து மதிப்பிடுவதற்காக வரலாற்றை குறை கூறுவதை விட பிரதமர் கண்ணியத்தை காக்க வேண்டும்

News image

பிரதமர் நரேந்திர மோடியுடன் கை குலுக்கும் மன்மோகன் சிங்

Updated On :27 டிசம்பர் 2024, 6:09 am

DIN

புது தில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு 8.06 மணிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்(92) நினைவு இழந்ததையடுத்து, 9.51 மணிக்கு உயிரிழந்ததாக அந்த மருத்துவமனை தெரிவித்தது.

மன்மோகன் சிங் மறைந்த செய்தி அறிந்தவுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி அவரது மகள் பிரியங்கா காந்தி ஆகியோா் மருத்துவமனைக்கு விரைந்தனா்.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மன்மோகன் சிங் குறித்த செயல்பாடுகள், பேச்சுகள் சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

“இதுவரை எந்தப் பிரதமரும் தரம் தாழ்ந்த பேச்சைப் பேசவில்லை. வெறுப்புப் பேச்சைப் பேசிய முதல் பிரதமர் மோடிதான்” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால், கட்சித் தலைவர்கள் கடைசிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் வாக்காளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், “பிரதமர் பதவிக்குரிய மாண்பைச் சீர்குலைத்துவிட்டார் மோடி. பிரசாரம் முழுவதும் அவர் வெறுப்புப் பேச்சைப் பேசி வருகிறார். குறிப்பிட்ட சமுதாயத்தினரைத் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். அவரின் பிரசாரம் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் உள்ளது. இதற்குமுன் எந்த பிரதமரும் இப்படி வெறுப்புப் பேச்சையோ, கீழ்த்தரமான வார்த்தைகளையோ பயன்படுத்தவில்லை. பொது பிரசாரத்தில் கண்ணியமான பேச்சுகளைப் பேசாத முதல் பிரதமர் மோடி” என தெரிவித்தது பெரும் பேசும்பொருளானது.

மேலும், பொருளாதாரக் கொள்கை குறித்த சரியான புரிந்துணர்வு மோடி அரசிடம் இல்லை. வெளியுறவுக் கொள்கையிலும் பாஜக அரசு தோற்றுப் போய் விட்டது. சீனா நமது எல்லைக்குள் வந்து அமர்ந்திருக்கிறது. அதை தட்டிக் கேட்காமல், மக்களிடமிருந்து மறைக்கவே இந்த அரசு முயற்சித்து வருகிறது என குற்றம் சாட்டியவர், தலைவர்களை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிப்பதாலோ, ஊஞ்சலில் ஆடுவதாலோ, பிரியாணி ஊட்டுவதன் மூலமோ வெளியுறவுக் கொள்கையை கட்டமைக்க முடியாது என்பதை பிரதமர் புரிந்துகொண்டிருப்பார் என நம்புகிறேன் என வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் மோடியை கடுமையாக சாடினார் மன்மோகன் சிங்.

நேரு காரணம்னு சொல்லாதீங்க

அதேபோன்று இந்தியாவிடம் தொடர்ந்து அத்துமீறி வரும் சீனா குறித்து பேசுகையில், ஒருபுறம் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகளை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்க, மறுபுறம் கடந்த ஏழரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தற்போதைய மோடி அரசு, தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு, சரி செய்யாமல், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை இன்னும் குற்றம் சாட்டி வருகிறார்கள். பிரதமரின் பதவிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளதாக நான் உணர்கிறேன். தவறுகளை குறைத்து மதிப்பிடுவதற்காக வரலாற்றை குறை கூறுவதை விட பிரதமர் கண்ணியத்தை காக்க வேண்டும் என சிங் கூறினார்.

இது குறித்த விடியோ பதிவுகள் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.