முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

16 மணி நேர போராட்டம்... ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் பலி!

ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் பலி!

News image
Updated On :29 டிசம்பர் 2024, 12:50 pm IST

மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் 140 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவனை 16 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட் நிலையில் அச்சிறுவன் பலியானார்.

குணா மாவட்டத் தலைமையகத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ரகோகர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பிப்லியா கிராமத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சுமித் மீனா என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை வெளியே கொண்டு வந்தபோது, சுயநினைவு இல்லாத நிலையில் சிறுவன் இருந்துள்ளார்.

அச்சிறுவனின் உயிரைக் காப்பாற்ற ரகோகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக குணா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் சின்ஹா ​​தெரிவித்தார்.

குணா மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி ராஜ்குமார் ரிஷிஷ்வர் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ”சுமித் மீனா இறந்துவிட்டார்” என்று தெரிவித்தார்.

சுமார் 140 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுவன் 39 அடி ஆழத்தில் சிக்கியதாக குணா ஆட்சியர் சதேந்திர சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.

"குளிர்காலம் என்பதால் குறுகிய ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனின் கைகள் மற்றும் கால்கள் நனைந்தும் வீங்கியும் இருந்தது. அவரது ஆடைகளும் ஈரமாக இருந்தது, வாயில் சேறும் காணப்பட்டது" என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.