கோயிலில் சிலிண்டர் வெடிப்பு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

கர்நாடக சிலிண்டர் விபத்தில் பலியான ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதைப் பற்றி..
(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

ஹுப்பள்ளியிலுள்ள சிவன் கோயிலில் சிலிண்டர் வெடிப்பில் படுகாயமடைந்த ஐயப்ப பக்தர்களில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த டிச.23 அன்று சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அங்கு உறங்கிக்கொண்டிருந்த 9 ஐயப்ப பக்தர்களுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது.

பின்னர் கர்நாடக அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர்கள் 9 பேரில் நேற்று (டிச.28) இரவு ஒருவர் பலியானதுடன், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்திருந்தது.

இந்நிலையில், இன்று (டிச.29) காலை மஞ்சுநாத் வாக்மோர் (வயது-22) என்பவர் சிகிச்சைப் பலனின்றி பலியாகியுள்ளார். இதனால், அந்த சிலிண்டர் விபத்தில் பலியான ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் கொல்லப்பட்ட 60% பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்களே! இந்திய ராணுவம் தகவல்

மேலும், படுகாயம் அடைந்தவர்களில் 3 பேர் தற்போது தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்களாக 9 பேரும் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டு சாய் நகரின் சிவன் கோயிலில் தங்கியிருந்தனர்.

பலியான ஐயப்ப பக்தர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.5 லட்சம் இழப்பீடு அறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com