மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

விஜய் சேதுபதியின் கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!

நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் இணைப்பது தொடர்பாக...

News image

விஜய் சேதுபதி, அன்பில் மகேஸ்

Updated On :30 டிசம்பர் 2024, 3:30 pm IST

இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் இணைப்பது வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வைத்த கோரிக்கைக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் அளித்துள்ளார்.

இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் சேதுபதி, நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெற செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

விஜய் சேதுபதியின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ”நல்லகண்ணுவின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து முதல்வரின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்பில் மகேஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.