கைதான ஞானசேகரன்
கைதான ஞானசேகரன்

அண்ணா பல்கலை. வழக்கு- ஞானசேகரனை காவலில் எடுக்கும் காவல்துறை

அண்ணா பல்கலை. சம்பவத்தில் கைதான ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
Published on

அண்ணா பல்கலை. சம்பவத்தில் கைதான ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டனர்.

பெண்கள் துணிச்சலாக புகார் கொடுப்பது திமுக ஆட்சியில்தான்: அமைச்சர் கோவி.செழியன்

இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டடது.

இந்த நிலையில் வழக்கில் கைதான ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com