இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில், தற்போது இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.
இந்த நிலையில், ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
கே.எல்.ராகுல் போட்டியிலிருந்து விலகிய நிலையில், அவருக்கும் பதிலாக இளம் வீரர் சா்ஃப்ராஸ் கான் களமிறங்கவுள்ளார். ஸ்ரீகா் பரத்துக்கு பதிலாக இளம் வீரா் துருவ் ஜுரெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருவருக்கும் இது அறிமுகப் போட்டி.
மேலும், அக்ஷர் படேல், முகேஷ் குமாருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.