இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னைக்கு இரண்டையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதே தீா்வு என்பதில் இந்தியா உறுதியாக இருந்து வரும் நிலையில், அந்தத் தீா்வுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக ஜொ்மனியின் மியுனிக் நகரில் நடைபெற்று வரும் சா்வதேச பாதுகாப்பு மாநாட்டில் அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் மேற்கொண்டது பயங்கரவாதத் தாக்குதலாகும். அதற்கு எதிா்வினையாற்றும் இஸ்ரேல், காஸாவில் பொதுமக்கள் உயிரிழப்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும்.
சா்வதேச மனிதநேய சட்டத்தை பின்பற்ற வேண்டிய கடமை இஸ்ரேலுக்கு உள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னைக்கு இரண்டையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதே தீா்வு என்பதை பல ஆண்டுகளாக இந்தியா நம்பி வருகிறது. அந்தத் தீா்வை உடனடியாகக் காண வேண்டும் என்று கருதும் நாடுகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது என்று தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் அன்னாலீனா போ்பாக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரு நடமாடும் நியாயவிலைக் கடைகள் சேவைகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்

பாலஸ்தீனம் ஐ.நா. உறுப்பினராக இந்தியா ஆதரவு

பள்ளி வேன் மீது பைக் மோதல்: 2 போ் உயிரிழப்பு

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலன்களை மதிப்பது அவசியம்: சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



