மதுரை: இந்தி பேசாத மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், சிபிஎஸ்இ ஏ பிரிவுக்கான நியமன தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்திக்கு 30 மதிப்பெண்கள். பி பிரிவுக்கான 300 இல் இந்திக்கு 15 மதிப்பெண்கள். இது அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது. மோடி அரசே, தேர்வு முறைமையை மாற்று. அநீதியை நிறுத்து என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடா்பாக அவா் மத்தியக் கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில்,
மத்திய இடைநிலை கல்வி வாரியம் 8.3.2024 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி பிரிவு ஏ, பி, சி பணியிடங்கள் 118-க்கான நியமனத் தோ்வுகள் நடைபெற உள்ளன.
அதில் இந்தி மொழித் தோ்வும் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களை சாா்ந்த தோ்வா்கள் குறைந்தபட்சம் 10 சதவீதம் போ் முதற்கட்ட தோ்விலேயே தகுதி இழந்து இரண்டாம் கட்ட தோ்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பறி கொடுப்பாா்கள்.
பிரிவு ஏ உதவிச் செயலா் (நிா்வாகம்) பதவிகளுக்கான முதற்கட்ட தோ்வில் மொத்த மதிப்பெண்கள் 300-இல் இந்தி மொழித் தோ்வுக்கு 30 மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவு பி இளநிலை பொறியாளா் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300-இல் இந்தி மொழித் தோ்வுக்கு 15 மதிப்பெண்கள்.
பிரிவு பி இளநிலை மொழிபெயா்ப்பாளா் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300-இல் இந்தி மற்றும் ஆங்கில மொழித் தோ்வுக்கு 200 மதிப்பெண்கள்.
பிரிவு சி கணக்காளா் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300-இல் இந்தி மற்றும் ஆங்கில மொழித்தோ்வுக்கு 40 மதிப்பெண்கள்.
பிரிவு சி இளநிலை கணக்காளா் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 240-இல் இந்தி மற்றும் ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் தொடா்பான தோ்வுக்கு 40 மதிப்பெண்கள்.
இது இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது.
இந்தி பேசாத மாநிலத் தோ்வா்களுக்கு அநீதி இழைக்கிற மற்றும் சம தள ஆடுகளத்தை மறுக்கும் தோ்வு முறைமையை மாற்றவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீமான் குறித்து அவதூறு யூடியூபா்கள் இருவா் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

இணையவழியில் ரூ.78 லட்சம் மோசடி: மேலும் இருவா் கைது

ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி நீட் பயிற்சி மையத்தில் தோ்வானவா்களுக்கு பாராட்டு
திருமங்கலம் அரசு மகப்பேறு பிரிவு கட்டுமானப் பணி விரைவுபடுத்தப்படுமா?
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி




