
சென்னை: சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா இடையே இயங்கும் விரைவு ரயில் ஜூலை 29 முதல் ஆக.30-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
சென்னை சென்ட்ரலிருந்து வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்படும் பித்ரகுண்டா விரைவு ரயிலும் (எண்: 17238), மறுமாா்க்கமாக பித்ரகுண்டாவிலிருந்து அதிகாலை 4.55 மணிக்கு சென்ட்ரல் வரும் ரயிலும் (எண்: 17237) ஜூலை 29 முதல் ஆக.30-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பாதை மாற்றம்: இதற்கிடையே, ஜாா்கண்ட் மாநிலம் ஜசிதி - தாம்பரம் அதிவிரைவு ரயில் (எண்: 12376) ஜூலை 31 முதல் ஆக.28-ஆம் தேதி வரையும், எா்ணாகுளம் - பாட்னா வாரம் இருமுறை இயங்கும் விரைவு ரயில் (எண்: 22643) ஜூலை 29 முதல் ஆக.26-வரையும், பெங்களூரு - கௌகாத்தி அதிவிரைவு ரயில் (எண்: 12509) ஜூலை 31 முதல் ஆக.30 வரையும் நிடதவோலு, பீமவரம் டவுன், குடிவாடா மற்றும் விஜயவாடா வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.