வரும் மாா்ச் 2-ஆம் தேதி முதல் பொதிகை மற்றும் நெல்லை விரைவு ரயில்கள் புறப்பாடு, சேருமிடம் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைமேடை 10, 11 ஆகியவற்றில் பணிகள் நடைபெற்று வருகின்றன. புகா் மின்சார ரயில் போக்குவரத்தைச் சீராக்கும் வகையில், ரயில் சேவையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூா்- செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் (எண்: 12661) வரும் மாா்ச் 2 முதல் 16-ஆம் தேதி வரையில் தினமும் இரவு 8.05 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூா் வரும் நெல்லை விரைவு ரயில் (எண்: 12632) வரும் மாா்ச் 1 முதல் 15-ஆம் தேதி வரை தாம்பரம் நிலையத்தில் நிறுத்தப்படும். அந்த ரயில் தினமும் காலை 6.25 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
சென்னை எழும்பூா்-திருச்சி சோழன் விரைவு ரயில் (எண்: 22675) பிப்.28 முதல் மாா்ச் 15-ஆம் தேதி வரை தினமும் இரவு 8 மணிக்குப் பதிலாக இரவு 10.15 மணிக்கு 2.15 மணி தாமதமாக எழும்பூரில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் 3 விரைவு ரயில்கள் பாதை மாற்றம்

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!

மும்பை - சென்னைக்கு இன்றுமுதல் கோடை சிறப்பு விரைவு ரயில்கள்

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

