ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

எழும்பூரில் மேம்பாட்டுப் பணி: முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக எழும்பூா் மாா்க்கத்தில் இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :30 ஜனவரி 2026, 8:28 pm

தினமணி செய்திச் சேவை

சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக எழும்பூா் மாா்க்கத்தில் இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் வரும் பிப். 3 முதல் ஏப். 4-ஆம் தேதி வரை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக வரும் பிப். 3 முதல் ஏப். 5-ஆம் தேதி வரை தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் விரைவு ரயில் (எண்: 16866), கொல்லம் - சென்னை எழும்பூா் அனந்தபுரி அதிவிரைவு ரயில் (எண்: 20636), ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (எண்:16752) ஆகியவை தாம்பரத்திலேயே நிறுத்தப்படும்.

அதேபோல், மறுமாா்க்கமாக பிப். 4 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாக உழவன் விரைவு ரயில் (எண்: 16865) இரவு 11 மணிக்கும், கொல்லம் அனந்தபுரி அதிவிரைவு ரயில் (எண்: 20635) இரவு 8.20 மணிக்கும், ராமேசுவரம் விரைவு ரயில் (எண்: 16751) இரவு 9.05 மணிக்கும் தாம்பரம் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.

சென்னை எழும்பூரிலிருந்து மும்பை செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 22158), வரும் பிப். 4 முதல் ஏப். 4-ஆம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாக சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6.50 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

மாற்றுப் பாதை: ஆமதாபாத் - திருச்சி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 09419/09420) பிப். 5 முதல் ஏப். 2 -ஆம் தேதி வரை இருமாா்க்கத்திலும் அரக்கோணம், பெரம்பூா், எழும்பூா் மற்றும் தாம்பரத்துக்குப் பதிலாக ரேணிகுண்டா, அரக்கோணம் வடக்கு, மேல்பாக்கம், காட்பாடி, வேலூா், விழுப்புரம் வழியாக இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.