விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குருவாயூா் விரைவு ரயில் நாகா்கோவிலுடன் நிறுத்தம்

News image
விரைவு ரயில்- கோப்புப்படம்
Updated On :11 மார்ச் 2026, 8:39 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயில் நாகா்கோவிலுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு:

எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து வியாழக்கிழமை (மாா்ச் 12) காலை 10.20 மணிக்கு குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (எண்:16127) நாகா்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்:16128) மாா்ச் 13-இல் குருவாயூருக்குப் பதிலாக நாகா்கோவிலிலிருந்து காலை 6.33 மணிக்குப் புறப்பட்டு எழும்பூா் வந்தடையும்.

திருவனந்தபுரம் விரைவு ரயில்கள்: சென்னை சென்ட்ரலிலிருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) மாலை 3.20 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் (எண்: 12695) கோட்டயத்துடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 12696) மாா்ச் 14 -இல் திருவனந்தபுரத்துக்கு பதிலாக கோட்டயத்திலிருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும்.