
மேட்டூர்: மேட்டூர் அணை நீர் வரத்து 4,521 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4521 கன அடியாக அதிகரித்துள்ளது.
புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40.59 அடியிலிருந்து 41.15 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,341 கன அடியிலிருந்து 452 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 12.69 டிஎம்சியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.