ஆம்ஸ்ட்ராங் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து ஆர்.நல்லகண்ணு அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்துக்கு நேரில் சென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தகைசால் தமிழருமான ஆர்.நல்லகண்ணு அவரது குடும்பத்துக்கு வெள்ளிக்கிழமை ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் அவரது உருவப் படத்துக்கு நல்லகண்ணு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது மனைவி பொற்கொடி மற்றும் குழந்தையை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.







