டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கோவை ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை நிரம்பியது!

கோவை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை நிரம்பியுள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2024, 10:59 am

DIN

கோவை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை நிரம்பியுள்ளது. ஆபத்தை உணராமல் இளைஞர்கள் நொய்யலாற்றில் இறங்கி மீன் பிடித்து வருகின்றனர்.

கோவையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழையால் வேகமாக தண்ணீர் நிரம்பி வருகிறது.

இந்த நிலையில், கோவை ஆத்துப்பாலம் கால்வாய் பகுதியில் அமைந்துள்ள தடுப்பணை நிறைந்து நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆத்துப்பாலம், குணியமுத்தூர், கரும்புக்கடை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தடுப்பணையின் கரை ஓரங்களில் மீன் பிடித்து வருகின்றன். அதிலும் சிலர் தண்ணீரில் இறங்கி ஆபத்தை உணராமல் மீன் பிடித்து வருகின்றனர்.

திடீரென வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை பதாகைகளை வைக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு இல்லாமல் மீன் பிடித்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.