கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் புதிய விரைவு ரயில்: ஜூலை 19-ல் தொடக்கம்!

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையேயான புதிய விரைவு ரயில் சேவை ஜூலை 19 ஆம் தேதி தொடங்கப்படுகிறது.

News image

கோப்புப்படம்.

Updated On :18 ஜூலை 2024, 1:52 pm IST

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையேயான புதிய விரைவு ரயில் சேவை ஜூலை 19 ஆம் தேதி தொடங்கப்படுகிறது.

முதல் ரயில் சேவையை ஜூலை 19 ஆம் தேதி மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடக்கி வைக்கிறார். இந்த புதிய ரயில் சேவை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10.50-க்கு புறப்படும் என்றும், மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.35-க்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே நேரடி ரயிலை இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.