தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் புதிய விரைவு ரயில்: ஜூலை 19-ல் தொடக்கம்!

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையேயான புதிய விரைவு ரயில் சேவை ஜூலை 19 ஆம் தேதி தொடங்கப்படுகிறது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையேயான புதிய விரைவு ரயில் சேவை ஜூலை 19 ஆம் தேதி தொடங்கப்படுகிறது.

முதல் ரயில் சேவையை ஜூலை 19 ஆம் தேதி மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடக்கி வைக்கிறார். இந்த புதிய ரயில் சேவை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10.50-க்கு புறப்படும் என்றும், மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.35-க்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.
தமிழகத்துக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்: 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே நேரடி ரயிலை இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com