
கோவை : மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ்’ இயங்குதள மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கோவை விமான நிலையத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. பெங்களூர், சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட 4 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ்’ இயங்குதள மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால் உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை திடீரென முடங்கியது. இதனால் விண்டோஸ் இயங்கு தளத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். குறிப்பாக, விமானத் துறை, வணிக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச் சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கி உள்ளன.
இந்த நிலையில், விண்டோஸ் மென்பொருள் பாதிப்பு காரணமாக கோவை விமான நிலையத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.பெங்களூர், சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தில்லி, புனே செல்லும் விமானங்கள் தாமதம் என அறிவிக்கபட்டு உள்ளது.
விமானம் தாமதமானது குறித்து இதுவரை எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். அத்துடன், விமானங்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கான ‘போா்டிங் பாஸ்’ விமான நிறுவன அதிகாரிகளால் கையால் எழுதித் தரப்பட்டது. இதனால், விமான நிலையங்கள் பயணிகளால் நிரம்பி வழிந்தன.
கோவை மட்டுமின்றி உலகில் பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கான ‘போா்டிங் பாஸ்’ விமான நிறுவன அதிகாரிகளால் கையால் எழுதித் தரப்பட்டது. இதனால், விமான நிலையங்கள் பயணிகளால் நிரம்பி வழிந்தன.
உலக அளவில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.