பொறுப்பற்ற தன்மையால் மக்கள் தங்களது உயிர்களை விலையாகக் கொடுத்து வருகின்றனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தில்லியில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீரில் சிக்கி 2 மாணவிகள் உள்பட 3 பேர் பலியாகினர். சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது.
தில்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மைய கட்டடத்தின் கீழ்தளத்தில் வெள்ள நீரில் சிக்கி மாணவர்கள் பலியானது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சில நாள்களுக்கு முன், மழையின் போது மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் பலியானார்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதுகாப்பற்ற கட்டுமானம், மோசமான திட்டமிடல் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றால் சாமானிய குடிமக்கள் தன் உயிர்களை விலையாகக் கொடுத்து வருகின்றனர்.
பாதுகாப்பாக மற்றும் வசதியாக வாழ்வது என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை, அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிரேட் நிகோபார் என்பது திட்டமல்ல; மிகக் கொடிய குற்றம்! ராகுல் காந்தி

தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் எச்சரிக்கை

குரூப் 1 தோ்வு: ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச நோ்காணல் பயிற்சி

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மூன்று மாணவர்கள் பலி!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



