மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கோவில்பட்டியில் மீன் வியாபாரி உள்பட 2 பேர் வெட்டி படுகொலை: போலீஸார் விசாரணை

கோவில்பட்டியில் மீன் வியாபாரி உள்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image

கோவில்பட்டியில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட மீன் வியாபாரி வெள்ளத்துரை மற்றும் சாமி.

Updated On :7 ஜூன் 2024, 3:07 am

DIN

கோவில்பட்டியில் மீன் வியாபாரி உள்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் வெள்ளத்துரை (50). கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா அருகே மீன்கடை நடத்தி வரும் இவர், இரவில் மீன் கடையில் தூங்குவது வழக்கமாம்.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சில மர்ம நபர்கள் வெள்ளத்துரை மற்றும் அவருடன் இருந்த சாமி என்பவரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் சாமி என்பவர் சம்பவ இடத்திலிருந்து சிறுது தூரம் ஓடி வந்த நிலையில் சாலையில் இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளத்துரையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து இரண்டு சடலங்களும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமோப்பநாய்

சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமோப்பநாய்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா? கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளாத்திகுளம் காவல்துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.