கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திமுக, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றும் பலனில்லை: தமிழிசை

எந்த பலனுமில்லாமல் திமுக, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது கவலையாக உள்ளது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

News image
தமிழிசை சௌந்தரராஜன்
Updated On :8 ஜூன் 2024, 5:03 am

DIN

சென்னை: எந்த பலனுமில்லாமல் திமுக, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது கவலையாக உள்ளது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையித்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக அதிகமான வாக்குகள் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பதை எல்லா தொண்டர்களையும் போலவே கவலையாகவே பார்க்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் எங்களுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை என்பதை விட, எந்த பலனும் இல்லாமல் திமுக, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது கவலை அளிக்கிறது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிரணியில் இருந்துகொண்டு தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டியதை கிடைக்கவிடாமல் செய்கிறார். ஸ்டாலின் எப்போதுமே இதுபோன்ற தவறைதான் செய்வார் என தமிழிசை கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.