ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சத்தீஸ்கரில் நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதலில் 2 வீரர்கள் காயம்

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை வீரர்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.

News image
மாதிரி கோப்புப்படம்
Updated On :14 ஜூன் 2024, 6:41 am

DIN

நாராயண்பூர்: சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை வீரர்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் சுமார் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டம் கோகமேட்டா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட குதுல் கிராமத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படையின் 53 ஆவது பட்டாலியின் வீரர்கள் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, நக்சல்கள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 வீரர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்த வீரர்கள் இரண்டு பேரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.