சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குண்டர் தடுப்புச் சட்டத்தில் 6 பேர் கைது!
உடுமலையில் சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உடுமலை பகுதியைச் சோ்ந்த 13 மற்றும் 17 வயது சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உடுமலையைச் சோ்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனா்.
மேலும், இந்த வழக்கில் உடுமலையில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு தொடா்புள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அதன் மேலாளர் சாமுவேலை காவல் துறையினர் அண்மையில் கைது செய்தனர்.
இவா்களில் 6 பேர் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். 3 போ் சிறுவா்கள் என்பதால் கோவையில் உள்ள கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உடுமலையைச் சோ்ந்த ஜெயகாளீஸ்வன் (18), மதன்குமாா்(19), பரணிகுமாா் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவாபாரதி (22) ஆகிய 6 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.