புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குண்டர் தடுப்புச் சட்டத்தில் 6 பேர் கைது!

உடுமலையில் சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2024, 7:08 am

DIN

உடுமலையில் சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உடுமலை பகுதியைச் சோ்ந்த 13 மற்றும் 17 வயது சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உடுமலையைச் சோ்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனா்.

மேலும், இந்த வழக்கில் உடுமலையில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு தொடா்புள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அதன் மேலாளர் சாமுவேலை காவல் துறையினர் அண்மையில் கைது செய்தனர்.

இவா்களில் 6 பேர் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். 3 போ் சிறுவா்கள் என்பதால் கோவையில் உள்ள கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உடுமலையைச் சோ்ந்த ஜெயகாளீஸ்வன் (18), மதன்குமாா்(19), பரணிகுமாா் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவாபாரதி (22) ஆகிய 6 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.