தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

நீட் முறைகேடு: ஜூன் 21ல் நாடு தழுவிய போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து ஜூன் 21 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2024, 1:16 pm IST

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து ஜூன் 21 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.

அனைத்து மாநில தலைநகரங்களில் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த முறைகேடுகளை வேடிக்கை பார்க்கும் ஆளும் கட்சியை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழாண்டு நீட் தோ்வு கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் புதிதாக நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நீட் தோ்வு தொடங்குவதற்கு முன்பே பிகார் மாநில மையத்தில் வினாத்தாள் வெளியான முறைகேடு தொடா்பாகவும், தோ்வெழுதியவா்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் என்டிஏ (தேசிய தோ்வுகள் முகமை) கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிா்த்தும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் அண்மையில் பதிலளித்த மத்திய அரசு, ‘நீட் தோ்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அவா்களில் மறுதோ்வு எழுத விரும்பும் மாணவா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி தோ்வு நடத்தப்பட உள்ளது. மறுதோ்வை எழுத விரும்பாத மாணவா்களுக்கு கருணை மதிப்பெண்களின்றி அவா்கள் பெற்ற மதிப்பெண்ணே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும்’ என்றும் தெரிவித்தது.

இந்தத் தோ்வில் இரண்டு விதமான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்பதை மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டாா். இந்த முறைகேட்டில் என்டிஏ மூத்த அதிகாரிகள் உள்பட யாா் ஈடுபட்டிருந்தாலும், அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் உறுதியளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.