பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலர் பிரேமலதா பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓரிரு நாளில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திராவிட முன்னேற்ற கழகம் தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.
ஆனால், அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், பாரதிய ஜனதா கட்சியும் இதுவரை தங்கள் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை இறுதி செய்யவில்லை.
கடந்த வாரத்தில் அதிமுகவுடன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்திய தேமுதிக, மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு இதுவரை நேரம் ஒதுக்கவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பாஜக மற்றும் அதிமுக இரண்டு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சாலிகிராமில் உள்ள இல்லத்தில் பிரேமலதாவை பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.