கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

அதிமுகவுக்கு நோ.. பாஜகவுக்கு எஸ் சொல்லுமா? தேமுதிக

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், பாஜகவுக்கு நேரம் ஒதுக்கிய தேமுதிக..

News image
தேமுதிக தலைவி பிரேமலதா
Updated On :11 மார்ச் 2024, 6:49 am

DIN

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலர் பிரேமலதா பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓரிரு நாளில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திராவிட முன்னேற்ற கழகம் தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.

ஆனால், அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், பாரதிய ஜனதா கட்சியும் இதுவரை தங்கள் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை இறுதி செய்யவில்லை.

கடந்த வாரத்தில் அதிமுகவுடன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்திய தேமுதிக, மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு இதுவரை நேரம் ஒதுக்கவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பாஜக மற்றும் அதிமுக இரண்டு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சாலிகிராமில் உள்ள இல்லத்தில் பிரேமலதாவை பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.